Kasthuri Manjal Seed
கஸ்தூரி . தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. கஸ்தூரிமஞ்சள்அடிபட்டவலிகளுக்கும், மூக்கில்வரும்நோய்களுக்கும், குன்மவயிற்றுவலிக்கும், கட்டிகள்உடையவும், தேமலைப்போக்கவும்பயன்படுகிறது. மேலும், இதுமணம்தரும்வாசனைப்பொடிகள்தயாரிக்கவும், குளிக்கஉதவும்தைலங்களில்சேர்க்கவும்பயன்படுகிறது.
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் பாதுகாக்கும்.