0
CORIANDER SEED ( KOTHAMALLI )CORIANDER SEED ( கொத்தமல்லி கீரை)CORIANDER SEED ( KOTHAMALLI )

CORIANDER SEED ( கொத்தமல்லி கீரை)

Quantity   :  2 Grams
Color        : Green
Non-returnable
₹10.00
Customize
Choose Quantity :
View Details
Product Information
Product Details

Growing Tips for Coriander
Thottam Siva YouTube Link for more details

கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் .கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.

கொத்தமல்லி கஷாயம் :

கொத்தமல்லி(அல்லது) தனியா, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை மற்றும் சதகுப்பை இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு 600 கிராம் கற்கண்டை பொடியுடன் கலந்து வைத்து கொள்ளவும். இவற்றை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

பயன்கள்: இந்த கஷாயத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

கொத்தமல்லியை நம் உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.


Disclaimer # 
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process
 

?கொத்தமல்லி தழையில் விட்டமின் ஏ, பி, சி உயிர் சத்துக்களும்சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன.
மனித்தனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது.இது வாயு பிரச்சினையைகுணமாக்கும்.நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு, தேங்காய் - 1, நாட்டு சர்க்கரை - தேவையான அளவு.சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து  அரைத்து வடிகட்டவும். இதன் கூட தேவையான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.இதைத் தொடர்ந்து பருகுவதால் #காமாலை, #கேன்சர் போன்ற மிகக் கொடியநோய்கள் அனைத்தும் குணமாகும். உடலில் உள்ள கழிவுகள்அனைத்தையும்  வெளியேற்றும். வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.கல்லீரலை பலப்படுத்தும். #பித்தம் கட்டுக்குள் இருக்கும். இதை தயார் செய்வது மிகவும் எளிதானது. இதை அனைவரும் பருகலாம்.தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.கொத்தமல்லிக்கு பதில் #கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்றுசாறு தயார் செய்து  உபயோக்கிலாம் ஆனால் கொத்தமல்லி சாறு தான் சிறந்தது.வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் #எலுமிச்சை சாறு,உப்பும், #மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

 

குறிப்பு: இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.

 





Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- An error occurred. Please try again later.